Wednesday, December 31, 2008
புதிய வருடத்தில் புதிய வெற்றி..
Monday, December 29, 2008
ஜெய்சன் வீட்டில் - அன்னதானம்!!!

Friday, December 26, 2008
காற்றின் சிறகுகள் வழியே ஆகாய முகவரிக்கு காற்றோடு கலந்த கடிதம்.

சந்தோஷமாய் குதூகலமாய் கொண்டாடிய நத்தார் பண்டிகை, உண்ட உணவு செறிமானம் ஆகும் முன்னம் டிசம்பர் 26ம் திகதி எம்மனைவரையும் கலங்கடிக்க வைத்தாள் கடல் தாய். உறங்க மடி தந்தவளே உறக்கத்தை பலருக்கு நீண்டதாயும் தந்தாள். இன்னும் பலரின் உறக்கத்தையும் பறித்துவிட்டாள். பெயர் தெரியாத ஒருத்தியாய் உருவெடுத்து இன்று சுனாமி என அழைக்கப்படுகிறாள்.
ஒரு பொருளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை இல்லாதொழிப்பது அவ்வளவு கடினமல்ல என்பதை உன்னைக்கண்ட பின் எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்.
டிசம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது தேவபாலன் பிறப்பே. இந்நிலை நான்கு வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் டிசம்பர் என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுனாமி. அந்தளவிற்கு கடல் அன்னையின் மறு உருவம் எம்மனைவர் மனதிலும் பதிந்துவிட்டது.
இவ் நான்கு வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. அதில் ஒன்றாக, உங்களோடு இணைந்தது தான் வெற்றி FM
உங்களில் ஒருவன் வெற்றி FM என்பதால் ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்கான கடிதங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறான் வெற்றியின் காற்றின் சிறகுகள் வாயிலாக.
இணைந்திடுங்கள் நீங்களும் இன்றிரவு 9 மணி செய்தியறிக்கையின் பின் சுனாமி நினைவாக ஒலிபரப்பப்படவிருக்கும் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் ஆகாய முகவரியோடு.
Wednesday, December 24, 2008
சோகங்களை சுகமாக்கிட வந்த சொந்தம் வெற்றி FM !

உங்களோடு என்றென்றுமே தோளோடு தோள் நிற்கப் போகும் தோழன் இன்று, வானலையில் 10 மாத குழந்தையாக தவழும் வெற்றி FM . தனது முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையினையும் ஆர்ப்பாட்டமில்லாத, அழகான, அமைதியான நத்தார் பண்டிகையாக உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் நேயர்களோடு கொண்டாவிருக்கின்றது.
அவ்வகையிலேயே இம்மாதம் 15ஆம் திகதி முதல் நத்தார் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாது ஆரம்பித்தது. தேவபாலனை வாழ்த்தும் பாடல்களையும், தனிமனித வாழ்வை மேம்படுத்தும் நத்தார் சிந்தனைகளையும் இன்றுவரை செவ்வனவே வழங்கி வருகின்றது. இதேபோல் மற்றுமொரு சிறப்பம்சமாக அமையப்போவது தேவபாலன் பிறக்கும் நள்ளிரவு, கொழும்பு 13 புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து எமது அறிவிப்பாளர்கள் வழங்கவிருக்கும் நேரடி ஒலிபரப்பு. அதுமட்டுமல்லாது நத்தார் தினத்தன்று வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பல்வேறுபட்ட வித்தியாசமான மாறுபட்ட அம்சங்களும் இடம்பெறவிருக்கின்றன.
சிசுபாலனை சிரம் தாழ்த்தி பூ பூக்கும் நேரத்தில் வரவேற்று விடியல் நிகழ்ச்சியிலே அவர் கருத்துக்களை அனைவரோடும் பகிரச் செய்து அவருடைய வினோதங்களை இவ்வியூகத்திற்கு வினோத வியூகம் வாயிலாக விளக்கி பஹல் பந்தியில் தேவபாலனை பசியாறச் செய்து அவரிடம் நாம் கற்றதை உலகறியச் செய்து எங்கேயும் எப்போதும் உலகமக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாய் ஒற்றுமையாய், இன, மத, வேறுபாடின்றி சாந்தியும் சமாதானமாய் வாழ நல்வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து காற்றின் சிறகுகள் மூலம் மண்ணுலகத்திற்கு மீண்டும் வரச்சொல்லி விண்ணுலகம் அனுப்பி வைப்போம் அதிரூபனை.
சிசுபாலனின் கொண்டாட்டத்தோடு எம்மோடு இணையவிருக்கும் மற்றுமொரு நபர் குடு குடு ஆனாலும் துடிப்பான இளைஞனாக நம் வெள்ளை தாத்தா SANTA. வெற்றியோடு நத்தாரை கொண்டாடும் நேயர்களுக்கு வானலைப் பரிசுகளை வழங்கி சிசுபாலனின் தோற்றம் கொண்ட குழந்தைகளோடும் தம் பொழுதை கழிக்கவுள்ளார்.
இதெல்லாம் எவ்வாறு எப்படி என்று யோசிப்பவர்களும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நத்தாரை கொண்டாட விரும்புவர்களும் இணைந்திருங்கள் வெற்றியோடு என்றென்றும்.
வெற்றி FM கிறிஸ்மஸ் FM
வெற்றி FM - "வாழ்க்கைக்கு வெற்றி"
Tuesday, December 23, 2008
McDonalds கற்றது கையளவு.

உலக நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடி, சினிமா என பல துறைகளையும் அலசும் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை வாரநாட்களில் கேட்கத்தவறாதீர்கள்.
இந்த பண்டிகை காலத்தில் வெற்றி FM இல் மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை கற்றது கையளவு நிகழ்ச்சியை கேட்கும் நண்பர்களுக்கு McDonalds வழங்கும் வவுச்சர்கள் காத்திருக்கின்றன.
அம்பாளின் அருளை வேண்டி வெற்றியுடன் இணைந்து நின்ற பெனிகல தோட்டம்

குளுகுளுப்பான இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் பெனிகெல தோட்டத்தில் கால்பதித்த வெற்றிக் குழுவினர் தங்களுடைய இசைநிகழ்வை ஆலயமுன்றலில் ஆரம்பித்தனர். அவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்திபாடல்களை ஒலிபரப்பி மகிழ்வித்தனர்.
மதியவேளையில் மீண்டும் பூஜைகள் ஆரம்பமாகி அம்பாள் ஆலயத்தை சுற்றி வலம் வந்தபின் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை வெற்றியின் இசைமழையை ஆரம்பித்த வெற்றிக்குழுவினர் நேயர்களின் பெயர்களையும் வாழ்த்துகளையும் இணைத்ததோடு போட்டிகளையும் நடாத்தி வெற்றியின் நினைவுப் பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
இதேநேரம் வெற்றி குழுவினருடன் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைத்து நேயர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.
இதில் முதலில் தெளிவற்று இருந்த வெற்றி அலைவரிசையினை தாம் அன்டானாவை பூட்டி ஏன் எத்தனையோ தடவை தம் கைகளால் பிடித்தவண்ணம் வெற்றியை கேட்டதாகவும் வெற்றியின் பேப்பர் தம்பி விடியல் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தங்களை கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் எங்களுடன் பேசிய 'சரோஜா' குழுவினர் தாங்கள் எத்தனையோ தடவை call எடுத்தும நாம் அதை answer பண்ணவில்லை என உரிமையுடன் குறைபட்டக்கொண்டனர்.
அத்துடன் வெற்றி குழுவினரை தங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு எத்தனையோ நேயர்கள் அன்பாக அழைத்தும் பல நேயர்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமைக்கு வருந்துகின்றோம். அத்துடன் அன்பாக அனுசரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
மாலை 3.30 மணியளவில் மீண்டும் பூஜைகள் நடைபெற்று மேளகச்சேரியுடன் வாத்தியக் குழுவினரும் தொடரிசை வழங்க வீதி உலா ஆரம்பமானது. பெனிகெல தோட்டத்திலுள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்ற அம்பாள் அதன்பின் ஆலயத்திலிருந்து ஏறத்தாள 3 1/2 கிலோமீற்றர் துரத்திலுள்ள கண்டிவீதிவரை உலாவாக வந்து அருள் பாலித்தார். தமிழ் சிங்கள சகோதரர்கள் பேதங்களை மறந்து அம்பாளின் அருளை வேண்டி இணைந்து நின்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.
இவ்வீதி உலாவில் கலந்து கொண்டு வந்த வெற்றிகுழுவினர் அடையே ஆலய பரிபாலசபையினரும் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்க உதவி புரிந்த வரகாபொல அட்டகாச புயல் அமுதனுக்கு வெற்றியின் நினைவுப்பரிசினை
வழங்கினர்
நள்ளிரவை தொடும் வேளையில் வீதி உலா நிறைவுக்கு வந்தது. வெற்றி குழுவினர் இங்கிருந்து விடைபெறும் போது பெனிஹெல தோட்டமக்கள் ஒன்று திரண்டு கரகோஷமெழுப்பி நன்றி தெரிவித்தனர்.
உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்வீதி உலாவுக்கு வெற்றி குடும்பமும் பங்களிப்பு செய்வதையிட்டு மகிழ்கின்றோம்.
இதேநேரம் வீதி உலா நிறைவுற்ற பின்னர் ஆலயத்துக்கண்மையில் இசை நிகழ்வை வழங்கிடுவோம் என தெரிவித்த எம்மால் வீதி உலா நிறைவு நள்ளிரவை தொட்டதால் அவ் இசைநிகழ்ச்சியை வழங்க முடியாமல் போனமைக்கு வருந்துகின்றோம்.