Pages

Thursday, February 12, 2009

ஆச்சரியமும் அமானுஷ்யமும்

ஆச்சரியமும் அமானுஷ்யமும்

பலரும் அஞ்சும் ஆனால் அறிய ஆர்வமாக இருக்கும் ஒரு சுவாரஸ்யமான மனித சக்திக்கு அப்பால்ப்பட்ட விடயத்தை வெற்றி வெற்றிகரமாக தர ஆரம்பித்திருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை பேய்கள் பற்றிய உண்மைக் கதைகள் மிகச்சிறந்த பின்னணி இசைகளுடன் உங்களை திகிலூட்டிக்கொண்டிருக்கிறது.

பலரது வாழ்க்கையில் நிஜமாகவே நடைபெற்ற சிலர் கதையாகவே கேட்டு சிலிர்த்துபோன சம்பவங்கள் வானலையில் சங்கமமாகின்றது. சிறுவர்களும் இதயம் பலவீனமானவர்களும் தனிமையில் இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சிசை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

இந்த நிகழ்ச்சியில் உங்கள் பிரதிகளும் இடம்பெற விரும்பினால் ஆச்சரியமும் அமானுஷ்யமும், வெற்றி FM, த.பெ. இல.1011, கொழும்பு என்ற முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கலாம் அல்லது உங்கள் குரலிலேயே இறுவட்டில் பதிவு செய்து அனுபிவைக்கலாம். அதுமட்டுமன்றி vettri@voa.lk என்ற மின்அஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்கலாம்.

வெற்றி,

வாழ்க்கைக்கு வெற்றி.

....................................................................................................................................

தினக்குரலில் வெளியான விமர்சனம்.

வெற்றியின் பயனுள்ள நிகழ்ச்சிகளோடு ஆச்சரியமும் அமானுஷ்யமும்.

வெற்றி fmமில், கடந்த வெள்ளிக்கிழமை 30ம் திகதி இரவு செய்திகளைத் தொடர்ந்து புதிய நிகழ்ச்சியான "ஆச்சரியமும் அமானுஷ்யமும்" என்றொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வானொலியில் கூட "திக் திக்" நிகழ்ச்சிகளை படைத்து சாதிக்கமுடியும் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்லதொரு வழிகாட்டி. இந்நிகழ்ச்சி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காகவோ அல்லது தேவையற்ற பயஉணர்வை உண்டாக்குவதர்க்காகவோ என எண்ணத் தோன்றவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ பேர் வாழ்வில் நடந்திருக்கிறது.

பேய் இருக்கா......? ஆவி(இறந்த ஆத்மா) நடமாட்டம் இருக்க போன்றவை கேள்விக்குறியாக இருந்தாலும் இவ்வாறான செயற்பாடுகள் நிகழ்வது உண்மை. நமது முன்னோர்கள் இது பற்றிக் கூறுகையில், நாம் அதை கிண்டலாக எடுத்துக்கொள்வோம். அதற்கு அவர்கள் பரிகாரம் செய்கையில் மூடநம்பிக்கை என்போம். ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் இருப்பது உண்மை. இன்று படித்தவர்கள் கூட இதை நம்பும் அளவிற்கு சில நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அதை மற்றவர்களிடம் கூறினால் எங்கே அவர்கள் கிண்டல் செய்வார்களோ என எண்ணி மனதுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். மனதுக்குள் பூட்டி வைத்து மன நோயாளி ஆவதை விட இந்நிகழ்ச்சி மூலம் வெளிக்கொண்டு வரலாம். (முடிந்தால் தங்களுடைய வாழ்வில் இவ்வாறான சம்பவங்களை சந்தித்தவர்கள் தங்களுடைய குரலிலேயே விரித்து ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.) இந்நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்த அறிவிப்பாளர்கள் மிகத்திறமையான விதத்தில் சுவாரஸ்யமான முறையில் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சி அமானுஷ்யம் பற்றியதாக இருந்தாலும் வானலையில் கூட இவ்வாறான திகில் மிக்க நிகழ்ச்சியை படைக்க முடியுமா என்பது ஆச்சரியத்தை வழங்கியது. உண்மையான சில விடயங்களை இவ்வாறான முறையில் வெளிப்படுத்தும்போது ஏனையோர் பயம்கொள்ளா வண்ணம் இருக்க இடைஇடையே பாடல்களை ஒளிபரப்புவது நல்லது.

இலத்திரனியல் ஊடகம் என்பது வெறும் பொழுது போக்குதான் என பலர் நினைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், அந்த பொழுது போக்கும் நேரத்தில் கூட பயனுள்ள பல தகவல் கருத்துக்கள்,நகைச்சுவை நிகழ்ச்சியினை புகுத்தி இருக்கிறது வெற்றி பம்.

அதற்க்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும் வெற்றியின் விடியல் ஒரு சான்று. அன்றாட முக்கிய தகவல்களுடன் தனித்துவமான முறையில் ஒலிக்கிறது. அதில் சிறப்புற பங்குபெறும் பேப்பர் தம்பி அன்றாடம் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகளைத் தொகுத்தளிக்கும் விதமும் அருமை. அதேபோல் மாலை மணி தொடக்கம் 9 மணி வரை ஒளிபரப்பாகும் "எங்கேயும் எப்போதும்" நிகச்சியும் நேயர்களை தன்வசம் ஈர்த்துள்ளது எனலாம். குறிப்பாக நகைச்சுவை கலந்த கேள்வி பதில் கலந்து வரும் நிகச்சி வரவேற்கத்தக்கது. அறிவிப்பாளர் தொகுத்து வழங்கும் விதம்தான் வெற்றி எப்.எம் குழுவினரின் அளவான பேச்சு தெளிவான உச்சரிப்பு அனைத்திற்கும் மேல் நேயர்களுடன் கொண்டிருக்கும் உறவு பாலம் இனிவரும் காலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும்.

வானலையாள்.

2 comments:

ers said...

தமிழகத்தில் இருந்து நாங்கள் எப்படி அனுப்பி வைப்பது? மின்னஞ்சலில் அனுப்பலாமா?

செவியன் said...

ஆமாம். எல்லோரிடம் இருந்தும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆக்கங்கள்,விமர்சனங்கள் ஆகியவற்றை வரவேற்கிறோம்..

எங்கள் மின்னஞ்சல் முகவரி
vettri@voa.lk