Pages

Wednesday, January 13, 2010

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!



தைத்திருநாளாம்..!
மனங்களை ஒன்றித்து தைத்திடும் நாளாம்..!
பிணி நீக்கி பணி தொடர வைத்திடும் நாளாம்..!
நெல்மணிக் குவியல் உழவன் வரைந்த சித்திரம்..!
இவன் மாத்திரமே தரணியில் வாழும் சரித்திரம்..!
பயிர் வளர்த்து உயிர் காக்கும்
உழவன் புகழ் போற்றி இசைப்போம்.
கதிரவனுக்கு நன்றி உரைப்போம்.
சமத்துவ விதைவிதைத்து வேற்றுமை வேரறுத்து
இன்பக்கதிர்களை அறுவடை செய்வோம்.
இல்லத்தில் அச்சு வெல்லம் உள்ளத்தில் அன்பு வெள்ளம்
பொங்குக தரணியெங்கும் இன்பமாய்..!

வெற்றியின் நேயர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!


No comments: