Pages

Tuesday, September 29, 2009

கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி






காளையருக்கு ஓரு ராத்திரி அது சிவராத்திரி, கன்னியருக்கு 9 ராத்திரி அது நவராத்திரி, அந்த வகையில் அகிலம் ஆளும் அன்னை ஆதி பராசக்தி முப்பெருந் தேவியராய் அருள் தரும் காலம் இந் நவராத்திரி.
அனைத்துருவான பெண்ணை சக்தியாய் போற்றி வழிபடும் தொன்மையை உணர்த்துவது இந்நவராத்திரி.


அதர்மம் தலை நிமிரும் போது தர்மம் காக்க அன்னை வருவாள் என்பதை உணர்த்துவது 10வது நாளான விஜயதசமி. மகிஷாசுரமர்த்தினியாக அன்னை வடிவெடுத்த இவ் விஜயதசமி நன்னாளில் வளமான வாழ்வு வேண்டி பூஜைகள் நடத்தவது தொன்று தொட்டு வரும் வழமை.


இதற்கிணங்க நேற்று காலை 11மணிக்கு எமது அலுவலகத்தில் விஜயதசமி பூஜை நடைபெற்றது. இனமத பேதமின்றி யாவரும் இலங்கை தாயின் குழந்தைகளாக Voice of Asiaவின் அதிகாரிகள் உட்பட அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து நேற்றைய பூஜையை சிறப்பித்திருந்தனர். Voice of Asiaயை இன்னும் பல வெற்றிகளை பெற்றிட எல்லாம் வல்ல அம்பிகை அருள் புரிவாளாக!

No comments: