Pages

Friday, March 20, 2009

அகதியான மக்களுக்கு அமைதியான வாழ்வு கேட்போம்!


நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த வீடு வாசல்களை விட்டு நிர்க்கதியாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் நம் சகோதரர்களுக்கு கை கொடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.


பல கஷ்டங்களுக்கு மத்தியில் தங்கள் உறவுகளை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் எங்கள் சொந்தங்களுக்கு The International Association of Lions Clubs Multiple District 306 Sri Lanaka உடன் இலங்கையின் அனைத்து Lions கழகங்களும் வெற்றி F.Mமும் இணைந்து ஏற்ப்பாடு செய்துள்ள இந்த கரம்கொடுக்கும் நிகழ்வில் உங்கள் கரத்தையும் இணைத்து பாலம் அமையுங்கள்.

கைக்குழந்தைகள் முதல் பெரியோருக்கு அத்தியாவசியமாகத் தேவையான பால் மா, புதிய ஆடைகள், கட்டில் விரிப்புகள், துவாய்கள், சவர்க்காரம் மற்றும் உலர் உணவுப்போருட்களோடு உங்களால் இயன்ற பண உதவியையும் செய்து நீங்களும் அவர்கள் வாழ்கையில் தாங்கிப்பிடிக்கும் தூண்கள் ஆகுங்கள்.


உங்கள் பொருட்களை இலக்கம் 38, Ward Place கொழும்பு-07 என்ற முகவரியில் கையளிக்கும் அதேநேரம் உங்கள் பண உதவியை இலங்கை Lions கழகத்தின் பம்பலப்பிட்டி Commercial வங்கியின் கணக்கிலக்கம் 1106013630 இல் வைப்புச் செய்யுங்கள்.
இம்மாதம் 31 திகதிக்கு முன் உங்கள் உதவிகளை வழங்குங்கள்.தமிழ் மக்களுக்கு கைகொடுத்து உதவ வெற்றியோடு ஒன்று சேருங்கள்.
மேலதிக விபரங்களுக்கு: vettri@voa.lk


வெற்றி எப்.எம்,
வாழ்க்கைக்கு வெற்றி.

1 comment:

Think Why Not said...
This comment has been removed by the author.